ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். அவர் நடித்திருக்கும் படம் பசங்க 2. இது திருமணத்திற்கு பிறகு நடித்ததுதான். இந்தப் படத்துக்கு பிறகு அமலா பால் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் நடிக்கும் ஆசையில் இருப்பது பசங்க 2 பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்பட்டது.
விழாவில் இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது "இந்தப் படத்தில் அமலாபால் நடித்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். அமலாபால் பல பேட்டிகளில் சூர்யா சாருடன் நடிக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். இதனை மனதில் வைத்துக் கொண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை போனில் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர் "சாரி.. அமலா நடிக்கிற ஐடியா எதுவும் இல்லை. நிறைய பேர் கேட்டாங்க சாரி சொல்லிட்டேன்" என்றார். அமலாவை கதை கேட்க சொல்லுங்க அப்புறம் முடிவு பண்ணுங்க என்றேன். அதற்கு சம்மதித்தார். கதை அமலாபாலுக்கு பிடித்திருந்தது. சூர்யா சாருடன் நடிக்கும் ஆசையும் நிறைவேறுவதால் நடிக்க ஒப்புக் கொண்டார். இனி அவர் தாரளமாக வீட்டில் போய் இருக்கலாம் என்றார்.
அதன் பிறகு பேச வந்த அமலாபால் "இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது அமலாபாலுவுக்கு இந்த படம் நல்ல தொடக்கமாக இருக்கும் என்று பேசுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் என்னை வீட்டில் உட்காருங்கள் என்று சொல்லிவிட்டார். இந்த படத்தில் நான் நடிக்க விஜய்கூட கொஞ்சம் யோசித்தார். நான்தான் கதை நன்றாக இருக்கிறது, அதுவும் குழந்தைகள் படம் என்று நடித்தேன்" என்றார். அமலாவின் பேச்சை கவனிக்கும்போது அவா மீண்டும் நடிக்கும் ஆசையில் இருப்பது தெளிவாக தெரிகிறது.