ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜீவா, நயன்தாரா நடித்துவரும் படம் திருநாள். கருணாஸ் ஹீரோவாக அறிமுகமான அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய ராம்நாத் இயக்குகிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு கட்டமாக 65 நாளில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படத்தில் நயன்தரா குடும்ப பாங்கான கிராமத்து பெண் கேரக்டரில் நடித்துள்ளார். ஜீவாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இது தஞ்சையில் வாழ்ந்த ஒரு நிஜ தாதாவின் கதையை தழுவி கொஞ்சம் கற்பனை கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. "தவறாக தொடங்கப்படும் எந்த ஒரு விஷயமும் தவறாகத்தான் முடியும்" என்பது படம் சொல்ல வரும மெசேஜ். முனீஷ் காந்த் சோலோ காமெடி செய்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீகாந்த் தேவாவும் கிராமத்து இசை அமைத்திருக்கிறார். படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.