ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மூன்று ஆண்டு போராட்டத்திற்கு பிறகு சிம்பு நடித்த வாலு படம் திரைக்கு வந்தது. பெரிய வெற்றி இல்லை என்றாலும், படம் திரைக்கு வந்ததே சிம்புவைப் பொறுத்தவரை பெரிய சாதனையாக இருந்தது. அதையடுத்து மாஜி காதலி நயன்தாராவுடன் நடித்த இது நம்ம ஆளு படத்தை வெளியிடவும் ஆர்வம் காட்டினார். ஆனால் பைனான்ஸ் பிரச்சினை இருந்ததால் கெளதம்மேனன், செல்வராகவன் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அப்படி அவர் நடித்து வந்ததில் செல்வராகவனின் கான் படம் ஆரம்பத்தில் வேகமெடுத்தபோதும், இப்போது திடீரென்று பைனான்ஸ் பிரச்சினை காரணமாக வேகம் குறைந்து நின்று கொண்டிருக்கிறது. அதனால் தனது மனைவி இயக்கி வரும் மாலை நேரத்து மயக்கம் பட வேலைகளில் கவனத்தை திசைதிருப்பிவிட்டார் செல்வராகவன். இந்த நிலையில் அப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் புகையத் தொடங்கியது.
அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சிலகாலம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும். கான் படக்கதை எனக்கு மிகவும் பிடித்தமானது. அதோடு அந்த கதைக்கு சிம்பு தனது நடிப்பால் அற்புதமாக உயிர் கொடுத்து வந்தார். அந்தவகையில், அவரை விட்டு தற்காலிகமாக பிரிவது எனக்கு மனதளவில் வருத்தத்தை அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார் செல்வராகவன்.