ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஓகே கண்மணி படத்திற்கு பிறகு மணிரத்னம் தெலுங்கு மற்றும் தமிழில் அழகான காதல் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக படப்பிடிப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார். அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே தயாரிக்கிறது. முன்பெல்லாம் மணிரத்னம் படத்தில் நடிக்க தவம் கிடந்த நடிகர்கள் எல்லாம் இப்போது ஆளைவிட்டால் போதும் என்று தெரித்து ஓடுகிறார்கள். இத்தனைக்கு ஓகே கண்மணி சுமாரான வெற்றிப் படம்தான்.
படத்தில் துல்கர் சல்மானும், கீர்த்தி சுரேசும் நடிப்பதாக இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக நான் ஈ பட ஹீரோ நானி நடிப்பதாக சொல்லப்படுகிறது. துல்கருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது. இப்போது அவரும் விலகிக்கொள்ள அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை சாயாமி கெர் நடிப்பார் என்று தெரிகிறது. துல்கரும், கீர்த்தியும் விலகியதற்கான காரணம் தெரியவில்லை, அல்லது விலக்கப்பட்டார்களா என்றும் தெரியவில்லை.
சாயாமி கெர் தெலுங்கில் ரே படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது மிர்ஸியா என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இவர் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை உஷா கிரணின் பேத்தி. இவரது அம்மா உத்தாரா மெதர் கெர் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர், அத்தை நடிகை ஷபனா ஆஸ்மி. ஆக மொத்தம் பிரபலமான அழகு குடும்பத்திலிருந்து வருகிறார் சாயாமி.