ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நரேன், சிருஷ்டி டாங்கே, சூரி நடித்த கத்துக்குட்டி படம் சமீபத்தில் வெளிவந்தது. இது தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் திட்டம் வந்தால் வரும் பாதிப்புகளை எடுத்துக் காட்டியது. தற்போது மீத்தேன் திட்டத்துக்கு தடைவிதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்து. இதற்கு நன்றி தெரிவித்து படத்தின் இயக்குனர் இரா.சரவணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தரிசாக்கத் துடித்த மீத்தேன் திட்டத்தின் அபாயத்தையும், கொடூரத்தையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது எங்களுடைய கத்துக்குட்டி படம். 691 சதுர கி.மீ. விவசாய நிலத்தைக் காவு வாங்கி, வாழவாதாரத்தையே நிர்மூலமாக்கக்கூடிய மீத்தேன் திட்டத்தை ஆஸ்திரேலியா,அயர்லாந்து, கனடா, போலந்து உள்ளிட்ட உலகத்தின் பன்னாடுகளும் தடை செய்திருக்கும் நிலையில், தஞ்சை மண்ணில் அந்தத் திட்டத்தைக் கொண்டுவர அதிகார வர்க்கம் துடிப்பதையும், அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் கத்துக்குட்டிபடம் அப்பட்டமாக்கியது. வாழ்வாதாரங்களும் பாரம்பரியப் பெருமைகளும் மீத்தேன் திட்டத்தால் அழிந்துபோகும் அபாயத்தை கிராபிக்ஸ் காட்சிகளால் பதைபதைக்கும் விதமாக கத்துக்குட்டி படத்தில் சொல்லியிருந்தோம்.
இந்நிலையில், தமிழக அரசு மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளியிட்டிருப்பது விவசாய மக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது எங்கள் கத்துக்குட்டி படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மீத்தேன் திட்டத்தின் அபாயத்தை உணர்ந்து மக்களின் மனசாட்சியாக நின்று அரசாணை வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு கத்துக்குட்டி படக்குழு ஆத்மார்த்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் இரா.சரவணன் தெரிவித்து உள்ளார்.