Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஈழ தேவதை வாழ வாழவே... - சிவப்பு படத்தில் கபிலன்வைரமுத்து பாடல்

12 அக், 2015 - 15:08 IST
எழுத்தின் அளவு:
Kabilan-Vairamuthu-Song-in-Sivappu-movie

கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் நவீன் சந்திரா,ரூபா மஞ்சரி,ராஜ்கிரண் நடித்திருக்கும் படம் சிவப்பு. மது அம்பாட் ஒளிப்பதிவில் N.R.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். போரினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைத்தமிழர்களின் நிலையே இப்படத்தின் மையம். ரூபா மஞ்சரி இலங்கைத்தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ”சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம்” என்று கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் பாடலை ஹரிஹரன் பாடியிருக்கிறார். சிவப்பு திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது. சடுகுடு விழியில் பாடலின் வரிகள்:


பல்லவி


சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம் - என்


விடுகதை இரவு விடிவதை மறக்கும்


போர்க்கள பூமி வீசியெறிந்த


பூக்களில் ஒன்று பேசியதின்று


உனை சாய்த்த பள்ளங்களை


நிறைவாக மூடுகிறேன் - நீ


என் மனதோரம் நடந்துவர


ஒருவழிச்சாலை போடுகிறேன்


உயிரின் கனிகள் உனதடி - உன்


கண்ணீர் துளிகள் எனதடி


சரணம் 1


மாயப் பெண்மையே தேடித் தேடி உனை


தீயில் தள்ளியே மறைந்தேனே


கண்கள் கண்டதொரு ஈரக்காட்சியால்


மண்டை நரம்புகள் நனைந்தேனே


அகதிக்கூடாரம் கடந்துவந்து என்


சகதி மனவெளியில் விழுந்தாயே


சகதி மனவெளியைப் புல்வெளியாக்கி


சிதறு பூக்களாய் நாடந்தாயே


ஈழ தேவதை வாழ வாழவே


தூய பாவங்கள் நான் புரிவேன்


விடியல் கீற்றினில் விசிறிகள் செய்து


அடிமைக் காயங்கள் ஆற்றிடுவேன்


உயிரின் கனிகள் உனதடி - உன்


கண்ணீர் துளிகள் எனதடி


சரணம் 2


பாவை முன்னேறும் பாதை எங்கிலும்


பாவி முட்களைப் பொழிந்தேனே


காலம் காணாத கவிதை ஒன்றை


கப்பல் செய்திட நினைந்தேனே


வானமாளிகை தானனுப்பிய


மொத்த கர்வமென மொழிந்தேனே - உன்


சின்ன குடிசையில் ஒளிந்து கிடக்கும்


யுத்த சத்தங்கள் அறியேனே


நானறியாமல் என் சிறுமீசை


உந்தன் வாசலில் மண்டியிடும்


எனை கேட்காமல் என் குடை இனிமேல்


உனையும் உனையும் உள்ளடக்கும்


உயிரின் கனிகள் உனதடி - உன்


கண்ணீர் துளிகள் எனதடி


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in