ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கார்த்திக்கின் சகோதரர் கணேஷ் முத்துராமன் கொடைக்கானலில் ஓட்டல் வைத்திருக்கிறார். அவர் நேற்று சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அவரது லக்கேஜ்களை சோதனையிட்ட போலீசார் ஒரு பையில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக கணேஷ் முத்துராமனையும், துப்பாக்கி தோட்டாக்களையும் பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் "இது தனது பையல்ல கார்த்திக்கின் பை. சில வாரம் முன்பு ஓட்டலுக்கு வந்து தங்கினார். அப்போது இந்த பையை வைத்துவிட்டு சென்று விட்டார். இதை அவரிடம் கொடுப்பதற்காக எடுத்துச் செல்கிறேன். அதனுள் என்ன இருக்கிறது என்பதை நான் பார்க்கவில்லை" என்றார் கணேஷ் முத்துராமன். உடனடியாக போலீசார் சென்னையில் இருந்த கார்த்திக்கை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது தான் லைசன்சுடன் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அந்த தோட்டாக்கள் என்னுடையதுதான் என்றும் ஓட்டலில் மறந்து வைத்துவிட்டு வந்த பையை எடுத்து வரச்சொன்னதாகவும், அதற்குள் தோட்டா வைத்திருந்ததை மறந்து விட்டதாகவும் கார்த்திக் விளக்கம் அளித்திருக்கிறார்.
என்றாலும் விமானநிலையத்திற்குள் தோட்டாவை கொண்டு வந்தது சட்டப்படி குற்றம் என்பதால் கணேஷ் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் உடனே விடுதலை செய்யப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.