ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இது நம்ம ஆளு, படையப்பா, மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, உள்பட நூற்றுக்கணக்கான படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர் நடன இயக்குனர் லலிதாமணி, சென்னை வளசரவாக்கதில் உள்ள வள்ளியம்மை நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்க்கப்படுதாக வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் வீட்டு மொட்டை மாடியில் 5 தொட்டிகளில் 4 அடி உயரம் கொண்ட கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதை கண்டுபிடித்தனர். அவற்றை கைபற்றி காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக லலிதாமணியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 5 பேரை போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
லலிதாமணியின் சகோதரர் பக்கத்து தெருவில் வசித்து வருவதாகவும், அவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருப்பதாகவும் அவரே அவற்றை வளர்த்து வருவதாகவும். அது கஞ்சா செடி என்று தங்களுக்கு தெரியாது என்றும் விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அபிஷேக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.