ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசை படத்தை இயக்கி இசையமைத்து நடித்த எஸ்.ஜே.சூர்யா, அதன்பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை படத்தில் ஒரு ஆட்டோக்காரன் பாடலுக்கு நடனமாடினார். அதையடுத்து தற்போது பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இறைவி படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார்.
தனது பீட்சா படத்தில் நடித்த விஜயசேதுபதி, ஜிகர்தண்டா வில்லன் பாபி சிம்ஹா ஆகியோரை வைத்து இந்த படத்தை இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ், முதலில் எஸ்.ஜே.சூர்யாவை ஒரு கேரக்டருக்காகத்தான் அழைத்தாராம். ஆனால் அவர் கொடுத்த பர்பாமென்ஸ் அவரை வியக்க வைத்து விட்டதாம். அதனால் இப்போது அவரது கேரக்டர்தான் இறைவி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகியிருக்கிறதாம். அந்த அளவுக்கு அவரது கேரக்டரை பெருசுபடுத்தி விட்டாராம் இயக்குனர்.
இதனால் ஏற்கனவே நடித்ததை விடவும் இன்னும் பன்படங்கு பர்பாமென்ஸை கொட்டித்தீர்த்து விட்டாராம் எஸ்.ஜே.சூர்யா. அந்த வகையில், கலாச்சாரத்தை மையப்படுத்தும் கதையில் உருவாகியிருக்கும் இந்த இறைவி படத்தில் ஒரு காட்சியில் அழுது கொண்டு நடித்தபோது, சுற்றி நின்ற யூனிட்டையே கண்கலங்க வைத்து விட்டாராம் எஸ்.ஜே.சூர்யா. அதைப்பார்த்து விட்டு, இந்த படத்திற்கு பிறகு அவர் ரொம்ப பெரிய நடிகராகி விடுவார் என்று இறைவி படக்குழுவில் பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால் எஸ்.ஜே.சூர்யா கொடுத்துள்ள நடிப்பைப்பார்த்து விட்டு அப்படத்தில் நடித்திருக்கும் மற்ற ஹீரோக்களான விஜயசேதுபதி, பாபிசிம்ஹா இருவரும் இவரது நடிப்பினால், நம்முடைய கேரக்டர் எடுபடாமல் போய்விடுமோ என்று அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.