ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கமல்ஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் அப்படிப்பட்டவர் நடித்த படத்தில் ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டியை போட்டு தாண்டவா -என்று பாட்டெழுதினார்கள். மேலும், சினிமாவில் உள்ள எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி உள்ளிட்ட சில நடிகர்கள் கமலை கடவுள் என்றே அழைக்கின்றனர். அதுவும் அவர் அமர்ந்திருக்கும் மேடைகளிலேயே இப்படி சொல்கிறார்கள். அதற்கு கமல் பெரிதாக எதிர்ப்பு காட்டுவதில்லை. மாறாக, நான் கடவுள் இல்லை இல்லைன்னு சொல்றேன். நீங்க என்னையே கடவுள்னு சொல்றீங்களே என்றபடி சிரித்துக்கொள்வார்.
இப்படித்தான் நேற்று அவர் நடித்துள்ள தூங்காவனம் படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோது அங்கு வந்திருந்த நடிகர் வையாபுரி, கமல் சார்தான் எனக்கு கடவுள் என்கிற ரேஞ்சுக்கு பேசினார். கமல் தனது படங்களில் அவ்வப்போது வையாபுரிக்கு நடிக்க சான்ஸ் கொடுத்து வருவதால், அவர் மீதுள்ள அன்பினால் அப்படி சொல்வதை வழக்கமாக்க கொண்டு வருகிறார் வையாபுரி. ஆனால் அதன்பிறகு கமல் மேடையேறியபோது அரங்கினுள் கூடியிருந்த அவரது ரசிகர்களும் ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று குரல் எழுப்பிக்கொண்டேயிருந்தனர். அப்போது ஒரு ரசிகர், பகுத்தறிவு பகலவனே என்று உரக்க குரல் கொடுத்தார். அதைக்கேட்டு, ஆண்டவனை விட பகுத்தறிவு பகலவன் பெட்டரா இருக்கு என்று சொன்னபடி தனது பேச்சை ஆரம்பித்தார் கமல்.