ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காக்கிச்சட்டை படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கும்.... தனுஷுக்கும் இடையில் மனக்கசப்பு என்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதை இருவருமே மறுக்கவில்லை. சிவகார்த்திகேயன் மட்டும் அண்மையில் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் தனுஷ் உடனான பிரச்சனை பற்றி சூசகமாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், செப்டம்பர் 17 அன்று ரஜினி முருகன் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட போது, அதே தேதியில் தான் தயாரித்த நானும் ரௌடிதான் படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார் தனுஷ். அன்றைய தேதியில் ரஜினி முருகன் வெளியாகவில்லை என்றதும் தன் படத்தையும் தனுஷ் ரிலீஸ் செய்யவில்லை. தற்போது அக்டோபர் 21 அன்று ரஜினி முருகன் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதை அறிந்த தனுஷ், அதே தேதியில் நானும் ரௌடிதான் படத்தை வெளியிடவும் தீர்மானித்திருக்கிறாராம்.