ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்தவாரம் மலையாள சேனல்களின் பக்கம் டிவி ரிமோட்டை திருப்பியபோது மழவில் மனோரமா என்கிற சேனலில் நம்ம தேவயானி விதவிதமான அதிர்ச்சி முகபாவங்களை காண்பித்துக் கொண்டிருந்ததை ஏதேச்சையாக பார்க்க முடிந்தது. சங்கதி என்னவென்று விசாரித்தால் அது 'உக்ரம் உஜ்வலம்' என்கிற கேரளாவில் ஹிட்டான ரியாலிட்டி ஷோவின் சீசன்-2 நிகழ்ச்சி என்பதும் தேவயானி அதன் ஜட்ஜ் ஆக பொறுப்பேற்று இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. தேவயானி ஏற்கனவே மலையாள ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான்.
இந்த ஷோவில் மைய நடுவராக வினீத் பொறுப்பு வகிக்க, பெண் நடுவர்கள் மட்டும் அவ்வப்போது சீசனுக்கு தகுந்தமாதிரி மாறிக்கொள்வார்கள். சில மாதங்களுக்கு முன்பு கௌதமி, கனிகா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.. இப்போது கௌதமிக்கு பதிலாக தேவயானி என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த ஷோவில் டான்ஸ் மட்டும் இல்லாமல் கராத்தே, த்ரில்லிங் விளையாட்டு என பல அம்சங்கள் இருப்பதால் வழக்கமான ரியாலிட்டி ஷோ போல இல்லாமல் உற்சாகமாக இருப்பதாக சொல்கிறார் தேவயானி. இந்த ஷோவில் இவர் பார்த்து திகைத்தது ஜிம்னாஸ்டிக் சாகசத்தில் ஈடுபட்ட ஒரு இளம்பெண்ணின் திறமையைத்தான்.