அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
'ரஜினி முருகன்' படத்தில் நடித்து முடித்த பிறகே தன்னுடைய அடுத்த படத்திற்கான ஆரம்ப வேலைகளில் சிவகார்த்திகேயன் இறங்கி விட்டார். கடந்த மாதம் 17ம் தேதியே வெளியாக வேண்டிய அந்தப் படம், படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிதிப் பிரச்சனையால் திட்டமிட்டபடி வெளியாகாமல் போய்விட்டது. இந்த மாதம் 'ரஜினி முருகன்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அடுத்து நடிக்கப் போகும் படத்தை முடிவு செய்து அதற்கான பூஜை ஜுலை மாதம் நடந்த போதே சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அறிமுக இயக்குனரான பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயனின் ஜோடி யார் என்பதில் மட்டும் நேற்று வரை சஸ்பென்ஸ் நீடித்திருந்தது. பல நடிகைகள் நடிக்கப் போகிறார்கள் என பல பெயர்கள் வெளிவந்தன.
கடைசியாக 'ரஜினி முருகன்' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷையே மீண்டும் சிவாவின் ஜோடியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். கதாநாயகி முடிவாகிவிட்டதைத் தொடர்ந்து அடுத்த மாதம் நவம்பர் 2ம் தேதி முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்கள்.
இடைப்பட்ட மாதங்களில் படத்தில் பெண் வேடத்தில் நடிப்பதற்காக தனி கவனம் செலுத்தி, மேக்கப், தோற்றம், நடை, உடை ஆகியவற்றில் சிவகார்த்திகேயன் சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்.