பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கமல்ஹாசன், விக்ரம் வரிசையில் நடிப்புக்காகத் தங்களது உடலையும், தோற்றத்தையும், இளைத்துக் கொண்டும், வருத்திக் கொண்டும் வேறு எந்த நடிகரும் நடித்ததில்லை. நடிப்புதானே என்று கூட நினைக்காமல் கதாபாத்திரங்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ள அவர்களிருவரும் முன் வருவதாலேயே அவர்கள் மீது ரசிகர்களுக்கு தனி அபிமானம் இருக்கிறது. அந்த அபிமானத்தை முதல் முறையாக ஒரு நடிகை பெற்றிருக்கிறார் என்றால் அது அனுஷ்கா மட்டுமே. தன்னுடன் நடிக்கும் நடிகைகளே மனம் திறந்து பாராட்டும் அளவிற்கு தனது தோற்றத்தை 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக மிகவும் குண்டானவராக மாற்றியிருந்தார்.
உணவுக் கட்டுப்பாடு எதுவுமில்லாமல் 20 கிலோவிற்கும் மேல் தன்னுடைய உடலை அவர் ஏற்றியிருந்தார். 'பாகுபலி' படம் வெளிவந்த சமயத்தில் அந்தப் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்காக படக்குழுவினருடனான கொண்டாட்டத்தில் அனுஷ்காவின் தோற்றத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். குறுகிய காலத்திலேயே அவ்வளவு குண்டானவராக மாறியிருந்தார். ஒரு பெண் உடலை ஏற்றுவதும், இறக்குவதும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஆனால், அனுஷ்கா அதைத் துணிச்சலாக செய்திருந்தார்.
இப்போது மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்திலும், அழகிலும் திரும்பியிருக்கிறார் அனுஷ்கா. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற 'ருத்ரமாதேவி' பத்திரிகையாளர் சந்திப்பில் அனுஷ்காவைப் பார்த்தவர்கள் மீண்டும் அதே ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். அனுஷ்காவின் நடிப்பின் மீதான இந்த ஈடுபாடு திரையுலகத்தில் பலரையும் வியக்க வைத்துள்ளது.