ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'ஜிகர்தண்டா' படத்தின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர் பாபி சிம்ஹா. தமிழில் 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் அறிமுகமாகி 'நேரம்' படத்தில் அதிகமாக கவனத்தை ஈர்த்தவர். 'ஜிகர்தண்டா' படம் விமர்சன ரீதியாக அவருக்கு பாராட்டுக்களைக் கொடுத்ததோடு, தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அதன் பின் பல பட வாய்ப்புகள் பாபி சிம்ஹாவுக்குக் கிடைத்தது. ஆனாலும், அவர் எப்போதோ நடித்து முடித்த 'சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது, ஆ, ஆடாம ஜெயிச்சோமடா' ஆகிய படங்கள் பாபி சிம்ஹாவின் படங்களின் எண்ணிக்கையில் மட்டும்தான் சேர்ந்தது.
பாபி சிம்ஹா நடித்துள்ள படங்கள் அடுத்து ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன. இந்த வாரம் 9ம் தேதி 'மசாலா படம்' வெளியாக உள்ளது. அடுத்து மாதக் கடைசியில் 'கோ 2' படம் வெளிவர உள்ளது. தொடர்ந்து “உறுமீன், இறைவி, பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழாக்கம், பாம்பு சட்டை' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இவற்றில் 'பெங்களூர் டேய்ஸ் ' படத்தின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் முடிவடைய வேண்டி உள்ளது. மற்ற படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. பாபி சிம்ஹா நடித்து அடுத்தடுத்து வெளிவர உள்ள இந்தப் படங்கள் 'மசாலா படங்கள்' ஆக இருக்கப் போகிறதா அல்லது 'விருதுப் படங்கள்' ஆக இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.