ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜீவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அதிபர். பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பெரும் தோல்வியடைந்த படம். இதனை கண்ஸ்டோரியம் ஸ்டூடியோ சார்பில் கனடா வாழ் தமிழர் டி.சிவகுமார் தயாரித்திருந்தார். முதல் படம் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றே தீருவேன் என்று அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டார். மேலும் ஆண்டுக்கு 3 படங்கள் தயாரிப்பேன் என்றும் சொல்கிறார். அவர் கூறியதாவது:
அதிபர் படம் என் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றியது. ரியல் எஸ்டேட் அரக்கர்களிடம் என்னைப்போல யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட படம். அதன் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை. நான் சொன்ன விஷயம் மக்களை சென்று சேர்ந்ததில் மகிழ்ச்சிதான்.
தற்போது யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அடுத்த படத்தை தயாரிக்கிறேன். அதன் கதையை நான் எழுதியிருக்கிறேன். நான் அவனில்லை படத்தை இயக்கி செல்வா இயக்குகிறார். 3 ஹீரோக்கள் நடிக்கிறார்கள். போரின் போது ஒரு ஊரே திரண்டு வேறொரு நாட்டுக்கு செல்கிறது. அவர்கள் எப்படிச் சென்றார்கள். சென்ற இடத்தில் என்ன மாதிரி வாழ்ந்தார்கள் என்கிற கதை. இலங்கை ராணுவம், விடுதலைபுலிகள் போன்ற எந்த அம்சமும் இருக்காது. மனித உணர்வுகளை மையமாக கொண்ட படமாக இருக்கும். அடுத்து ஜனவரியில் பெரிய ஹீரோ நடிக்கும் கமர்ஷியல் படம் ஒன்றை தயாரிக்கிறேன். ஆண்டுக்கு 3 படங்கள் தயாரிக்கும் திட்டம் வைத்திருக்கிறேன். என்கிறார் சிவகுமார்.