ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் |
விஜய்யின் துப்பாக்கி, கத்தி படங்கள் 100 கோடி வசூல் சாதனை நிகழ்த்தின. அந்த படங்களை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள புலி படம் அந்த சாதனையை முறியடித்து விஜய்யை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படமாக அமையும் என்று அப்படம் வெளியாவதற்கு முன்பு பரபரப்பு செய்திகள் வெளியாகின.
அதோடு, ராஜமவுலியின் பாகுபலி படத்தின் வசூலை புலி தொடும் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டு வந்தது. அதற்கேற்ப இந்தியா முழுக்க அப்படத்தை ஒரே நேரத்தில் வெளியிட்டனர். வெளிநாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட்டு பரபரப்பு கூட்டினர்.
ஆனால், புலி வெளியாகி முதல் காட்சியிலேயே அதற்கு எதிரான கருத்துக்கள் வெளியாகி விட்டன. விமர்சனங்களும் சாதகமாக இல்லை. இதனால் விஜய் ரசிகர்களை தவிர மற்ற சராசரி ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுப்பது எதிர்பார்த்தபடி இல்லை. அந்த வகையில், விஜய்யின் முந்தைய படமான கத்தி முதல் நாள் 12.5 கோடி வசூலித்த நிலையில், புலி 10 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அதோடு, அடுத்தடுத்து தியேட்டர்களில் வசூல் பெரிய அளவில் இல்லையாம்.
ஆக, புலி வசூலில் பின்தங்கி விட்டதால், புலிக்கு முந்தின வாரமே வெளியான நயன்தாராவின் மாயா, ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களும் தொடர்ந்து நல்ல வசூலையை கொடுத்து வருகிறதாம். இதையடுத்து, விஜய்யின் கத்தி பட சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புலி 100 கோடி வசூல் சாதனை பட்டியலில் இடம்பெறுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.