ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கோலிவுட்டில் சந்தானம் பிரதான காமெடியனாக இருந்தபோது அவருக்கு அடுத்தபடியாக வளர்ந்து கொண்டிருந்த சூரிக்கு செல்லவிருந்த சில மெகா படங்களை அவர் கைப்பற்றி சூரிக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வந்தார். இதனால், திரைக்குப்பின்னால் அவர்களுக்கிடையே தொழில் போட்டி நடந்து கொண்டேயிருந்தது. அந்த வகையில், மேல்தட்டு ஹீரோ படங்களை சந்தானமும், கீழ்தட்டு ஹீரோக்களின் படங்களை சூரியும் பங்கு போட்டு நடித்து வந்தனர்.
இந்த நிலையில், டைரக்டர் ராஜேஷ்.எம் உள்ளிட்ட சிலர் தங்களது படங்களில் ஹீரோக்களுக்கு இணையான வேடத்தை சந்தானத்துக்கும் கொடுத்து வந்தனர். அதனால் அதுவே நாளடைவில் அவருக்கு ஹீரோ ஆசை ஏற்படுத்தி விட்டது. விளைவு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் ஹீரோவாக நடித்த அவர், இப்போது முழுநேர ஹீரோவாகி விட்டார். இதனால் அவருக்கு அடுத்தபடியாக வந்து கொண்டிருந்த சூரி இப்போது கோலிவுட்டின் முதன்மை காமெடியனாகியிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது அஞ்சாதே நரேன் நடித்துள்ள கத்துக்குட்டி படத்தில் அவருடன் படம் முழுக்க வரும் காமெடியனாக நடித்துள்ளார் சூரி. இந்த படத்தில் நரேனின் தந்தையாக டைரக்டர் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நடித்துள்ளார். படத்தில் அவரது கேரக்டர் பெயர் சந்தானம். சில காட்சிகளில் அவர் சூரியை டென்சன் செய்வது போன்று பேச, சந்தானம் எங்கிட்டேவா, இரு உன்னை கவனிச்சிக்கிறேன் என்பார். இது அப்படத்திலுள்ள சந்தானம் கேரக்டரைப் பார்த்துதான் சூரி சொல்கிறார். என்றாலும், இந்த காட்சி அவர் நடிகர் சந்தானத்தை அட்டாக் செய்வது போல் அமைந்துள்ளது.