14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
நடிகர் சந்தானமும், நடிகர் சேதுவும் பால்ய சினேகிதர்கள். டாக்டருக்கு படித்துள்ள சேது அந்த சமயத்தில் சந்தானத்துக்கு அவ்வப்போது செலவுக்கு பணமெல்லாம் கொடுப்பாராம். இந்த தகவலை சந்தானமே மேடைகளில் சொல்லியிருக்கிறார். பின்னர் ஒரு சமயத்தில் சந்தானம் லொள்ளு சபா நடிகராகி அதையடுத்து சினிமாவிலும் பிரவேசித்தார். அப்போது நான் சினிமாவில் பெரிய நடிகராகி விட்டால் உன்னையும் நடிகராக்கி விடுவேன் என்று சேதுவிடம் சொன்னாராம் சந்தானம். அதன்படியே தான் பெரிய காமெடியனான பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சேதுவை ஹீரோவாக்கினார்.
அதன்பிறகு வாலிபராஜா என்ற பெயரில் சேது நாயகனாக நடித்த படத்தில் ஒரு டாக்டர் வேடத்தில் சந்தானம் நடித்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்திருந்த விசாகா சிங்கே நாயகியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் ஒரு வருடத்திற்கு மேலாக வியாபாரம் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. அதனால் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று வந்த சேதுவுக்கு அடுத்தபடியாக புதிய படங்கள் கமிட்டாகவில்லை. அதோடு சந்தானமும் ஹீரோவாகிவிட்டதால் அவரது அரவணைப்பும் குறைந்துவிட்டது. விளைவு, அடுத்தபடியாக சினிமாவில் வாய்ப்புகள் தேடி வந்தால் நடிக்கலாம் இல்லையேல் முழு நேர டாக்டராகி விடலாம் என்று இப்போது சென்னையில் ஒரு நவீன தொழில் நுட்பமுள்ள கிளினிக் திறக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் நடிகர் சேது.