ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மைனா படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு கவனிக்கப்படும் நடிகரானவர் தம்பி ராமைய்யா. காமெடி என்கிற ட்ராக்கிலேயே செல்லாமல் குணசித்ர வேடங்களிலும் நடித்ததால் இப்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராகியிருக்கிறார் அவர். அந்த வகையில், தற்போது சில படங்களின் கதையில் மைய வேடங்களில் அவர் நடித்து வருகிறார். ஏற்கனவே 2 படத்தில் கதையின் நாயகனாக நடித்த தம்பி ராமைய்யா, இப்போது திரைப்பட நகரம் என்ற படத்திலும் லீடு ரோலில் நடித்திருக்கிறார். ஒரு படம் சினிமா சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் புரொடக்சன் மேனேஜராக நடித்துள்ளார் அவர். இதில் காமெடி காட்சிகள் அதிகமாக இருந்தாலும், ஒரு தயாரிப்பாளரின் வலிகளை சொல்லும் வகையிலும் நல்லதொரு புரொடக்சன் மேனேஜராக அவர் நடித்திருக்கிறாராம்.
மேலும், 2 படத்தில் ஒரு படி மேலே என்றொரு பாடலை சொந்த குரலில் பாடி நடித்திருந்த தம்பி ராமைய்யாவுக்கு இந்த படத்திலும் சினிமா உலகம் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதையடுத்து, வீரம் படத்தை அடுத்து அஜீத்தின் வேதாளம் படத்திலும் நடித்துள்ள அவர், முந்தைய படத்தில் காமெடி ரோலில் நடித்தவர். இந்த படத்தில் கண்பார்வை இல்லாதவராக நடித்துள்ளாராம். அந்த வகையில் சில காட்சிகளில் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் வகையில் உருக்கமாக நடித்திருக்கிறாராம் தம்பி ராமைய்யா. அவரது நடிப்பைப்பார்த்து விட்டு இந்த படத்திற்காகவும் தம்பிராமைய்யாவுக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.