ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு காலத்தில் சின்னத்திரை சீரியல்களை கலக்கி வந்தவர் தேவிப்பிரியா. நாயகி, வில்லி என பலதரப்பட்ட வேடங்களில் நடித்தார். அதோடு, சினிமாவிலும் சில படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். என்றாலும் அவரது கவனம் சீரியல்களிலேயே அதிகமாக இருந்ததால் சினிமாவில் பெரிய அளவில் வளர முடியவில்லை. ஆனால் இப்போது அவர் சீரியல்களிலும் வில்லி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதும், சினிமா வாய்ப்புகளையும் அதிகமாக வரவேற்கிறார். காரணம், என்னதான் சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தாலும் சினிமா நடிகை என்கிறபோதுதான் மரியாதையும், சம்பளமும் சின்னத்திரை உலகில் அதிகமாக கிடைக்கிறதாம்.
அதன்காரணமாக, கத்துக்குட்டி படத்தில் ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நடித்த தேவிப்பிரியா தற்போது மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். அதேசமயம் சீரியல்களைப் பொறுத்தவரை, வில்லி வேடங்களுக்கே அவர் முதலிடம் கொடுக்கிறாராம். என்னைக்கேட்டால், சீரியல்களில் வில்லிதான் கதாநாயகியே. கதையை நகர்த்தி செல்லும் மொத்த பொறுப்பும் வில்லியிடமே இருப்பதால் அதில்தான் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். அதனால்தான் நான் வில்லி வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று கூறும் தேவிப்பிரியா, சினிமாவில் வில்லி வேடம் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாராம். அந்த வகையில், சினிமா-சின்னத்திரை இரண்டு மீடியாக்களிலும் மெகா வில்லியாக ஒரு பெரிய ரவுண்டு வரவேண்டும் என்பதுதான் தேவிப்ரியாவின் ஆசையாக உள்ளதாம்.