ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தமுறை சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான மற்றொரு அணியினரும் போட்டியிடுகின்றனர். இதனால் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு நடைபெற இருக்கும் தேர்தல் அனல் பறக்கிறது. இந்நிலையில் விஷால் அணியினரின் ஆதரவு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் அவர்களது தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அததோடு அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து இளம் நடிகர்கள், மூத்த நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்ததோடு, தங்களது பலத்தையும் நிரூபித்தனர்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சரத்குமார், விஷால் அணியை தூண்டிவிடுவதே நடிகர் கமல் தான் என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது... நடிகர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை, பொய்யான குற்றச்சாட்டுகளை விஷால் அணியினர் கூறி வருகின்றனர். சங்கத்திற்கு வராதவர்கள் எல்லாம் இப்போது பேசுகிறார்கள். ஒப்பந்தம் போடப்படும்போதே இவர்கள் வந்து பேசியிருக்க வேண்டியது தானே, அப்போது எல்லாம் இவர்கள் எங்கு சென்றார்கள். சங்கத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக எதிரணியினர் செயல்படுகின்றனர். இவர்களுக்கு பின்னணியில் முழுக்க முழுக்க நடிகர் கமல்ஹாசன் தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார். கமலுக்காக நான் உழைத்துள்ளேன். அவரது உத்தம வில்லன் படம் ரிலீஸாக முடியாமல் இருந்தபோது நான் தான் உதவி செய்தேன். அந்த நன்றி கூட அவரிடம் இல்லை என்று கூறினார்.
மேலும் விஷால் அணியினரின் தேர்தல் அறிக்கை காமெடியாக உள்ளதாகவும், அவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் அக்டோபர் 11ம் தேதி அதே ராகவேந்திரா மண்டபத்தில் எங்களது அணியின் கூட்டம் நடைபெறுகிறது, அதில் நாங்கள் பதில் கண்டிப்பாக பதில் சொல்வோம் என்றார்.
முன்னதாக கமல், விஷால் அணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு நாசரை தலைவர் பதவிக்கு போட்டியிட முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.