Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் சிக்கியது என்ன.?

02 அக், 2015 - 14:36 IST
எழுத்தின் அளவு:
What-catched-in-Vijay,-Nayanthara,-Samantha-house

நடிகர் விஜய், நடிகையர் நயன்தாரா, சமந்தா வீடுகளில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்க பணம், நகைகள் மற்றும் ஆவணங்களை, வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.


கறுப்பு பணத்தில், புலி படம் தயாரிக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, அப்படத்தின் நாயகன் விஜய், தயாரிப்பாளர் செல்வக்குமார், விஜய்யின் அடுத்த பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகையர் நயன்தாரா மற்றும் சமந்தாவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், நேற்று முன்தினம், வருமான வரித்துறையைச் சேர்ந்த, 32 குழுக்களின், 300 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.


தமிழகம், கேரளா, ஆந்திராவில் காலை, 7:00 மணிக்கு துவங்கிய இந்த சோதனை, நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றியதாகவும், அவை குறித்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினர் ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், நேற்று காலை, இரண்டாவது நாளாக நடிகர் விஜய், நடிகையர் நயன்தாரா, சமந்தா வீடுகளில் தொடர் சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர்.


இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல் நாள் சோதனையின் போது, பல பொருட்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினோம். இவற்றுக்கான வருமான ஆதாரங்கள் மற்றும் வரி செலுத்தியது குறித்து, அவர்களிடம் கேட்க வேண்டி உள்ளது. எனவே, இரண்டாவது நாளாக சோதனை நடந்தது. வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களும் பதில் அளித்துள்ளனர். இவற்றை தொடர் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம். இறுதிகட்ட ஆய்வுக்கு பின், கணக்கில் வராமல் உள்ள சொத்துக்கள் குறித்த தகவல் வெளியிடப்படும். அதற்கு உரிய வரியை செலுத்தினால், அச்சொத்துக்கள் அவர்களிடம் திரும்ப அளிக்கப்படும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in