ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
“காவலன், துப்பாக்கி, தலைவா, கத்தி' ஆகிய படங்கள் வெளியீட்டு சமயத்தில் சிக்கலில் சிக்கியது. இப்போது அந்த வரிசையில் 'புலி' படமும் சிக்கிக் கொண்டுள்ளது. 'காவலன்' படத்தில் அசின் நாயகியாக நடித்திருந்ததால் அப்போது தமிழ் அமைப்புகள் அந்தப் படத்தை வெளியிடவிட மாட்டோம் என போராட்டத்தில் குதித்தனர். இலங்கை பிரச்சனை பற்றி எரிந்த போது இலங்கைக்கு அசின் பயணம் மேற்கொண்டதே தமிழ் அமைப்புகள் 'காவலன்' படத்தை எதிர்த்ததற்குக் காரணமாக அமைந்தது.
அடுத்து 'துப்பாக்கி' படம் வெளிவந்த போது அந்தப் படத்தில் முஸ்லிம்களைப் பற்றித் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள் என முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின் 'துப்பாக்கி' படம் வெளிவந்தது. அடுத்து 'தலைவா' படம் வெளியாக இருந்த தியேட்டர்களில் குண்டு வெடிப்பு மிரட்டல் வந்ததால் பாதுகாப்பு காரணம் கருதி அந்தப் படத்தின் வெளியீடு திட்டமிட்ட தேதியில் இருந்து இரண்டு வாரங்கள் தள்ளிப் போனது.
'கத்தி' படம் கடந்த வருடம் வெளியாக இருந்த சமயத்தில் அந்தப் படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனத்தை எதிர்த்து தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. படம் திட்டமிட்ட நாளில் வருமா வராதா என்ற சூழ்நிலையில் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு படம் வெளியானது.
இப்போது 'புலி' படம் இன்று வெளியாக உள்ள நிலையில் நேற்று திடீரென வருமான வரித் துறையின் புலி படம் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர் விஜய் ஆகியோரது வீடுகளில் நடத்திய சோதனையின் காரணமாக இன்று திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிகாலை காட்சிகள், சிறப்பு காலை காட்சிகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன. அதற்கு மாவட்ட கலெக்டர்களிடம் முன் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், படத்தைத் திரையிட கியூபுகளுக்கு 'கேடிஎம்' கொடுக்க தயாரிப்பாளரின் அனுமதிக் கடிதம் வேண்டும். பல வினியோகஸ்தர்களிடமிருந்து பணம் வரவேண்டியுள்ளதால் தயாரிப்பாளர்கள் இதுவரை அதற்கான அனுமதியைத் தரவில்லை. அவையனைத்தும் முடிந்த பிறகுதான் 'புலி' படத்தின் வெளியீடு இன்று இருக்கும்.
விஜய் படங்கள் தொடர்ந்து சிக்கலில் சிக்கி வருவது விஜய் ரசிகர்களுக்கு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் போன்ற வசூல் ஹீரோக்களின் படங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளிவந்தால்தான் அனைத்து மட்டங்களிலும் வியாபாரம் பெரிய அளவில் இருக்கும். அரசியல் ஆசை இல்லாமல் சினிமாவில் நடிப்பதை மட்டும் விஜய் பார்த்தால் இந்த பிரச்சனையே இல்லை என கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசிக் கொள்கிறார்கள்.