ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார் ஜாக்குலின். பெங்களூர் பொண்ணு. மாடலிங், டிவி நிகழ்ச்சி என்ற வளர்ந்து இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறார். பெற்ற மகளை அனாதை ஆசிரமத்தில் விடும் கனமான பாத்திரத்தில் முதல் படத்திலேயே நடித்து கவனத்தை ஈர்த்திருக்கிறார். அவர் கூறியதாவது:
எனக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது. கடவுள் கொடுத்த அழகு. நான் வளர்த்துக் கொண்ட திறமை இதுதான் என்னை நடிகையாகி இருக்கு. முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்காதே கொஞ்சம் வெயிட் பண்ணி யங் ஹீரோயினா நடின்னு பிரண்ட்சுங்க அட்வைஸ் பண்ணினாங்க. நான்தான் கதையும், கேரக்டரும்தான் முக்கியமுன்னு நடிக்க ஒத்துக்கிட்டேன். சின்னதா மேக்அப் போட்டு ரொம்ப சிம்பிளாக நடிச்சேன். நல்ல பேர் கிடைச்சிருக்கு.
ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, கங்கனா ரணவத் மாதிரி தனித்த அடையாளத்தோட நடிக்கணும்னு ஆசை. அதுக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். கமர்ஷியலுக்காக கிளாமராக நடிக்க மாட்டேன். முதல் படத்துல நல்ல பெயர் கிடைச்சிருக்கு. நீயா தேடிப்போனால் நிறைய வாய்ப்பு கிடைக்கும்னு சொல்றாங்க. அதுல உடன்பாடில்லை. நான் யார்கிட்டேயும் போய் சான்ஸ் கேட்க மாட்டேன். என் திறமைய நம்பி வர்ற படங்கள்ல மட்டும் நடிப்பேன். என்கிறார் ஜாக்குலின்.