ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தங்கர்பச்சான் அண்மையில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றார். விழாவில் அவர் பேசும் போது, "நான் 23 வயது முதல் எழுதி வருகிறேன். எழுத்தாளன் ஆக வேண்டும் என்று எழுதவில்லை எனக்குத் தோன்றியதை என்னுள் தாக்கம் ஏற்படுத்தியதை எழத ஆரம்பித்தேன். நான் ஒரு இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்பதைவிட எழுத்தாளர் என்பதில்தான் அதிக பெருமைப்படுகிறேன். என்னைப் பார்க்கிறவர்கள் உங்கள் அடுத்த படம் என்ன என்று கேட்பார்கள். என்னைப் பார்க்கிறவர்கள் யாரும் எது உங்கள் அடுத்த படைப்பு என்று கேட்பதில்லை, அப்படிச்சிலர் என்ன எழுதுகிறீர்கள் என்பார்கள். அவர்களிடம் நான் எழுதியதில் என்ன படித்தீர்கள் என்று நான் கேட்டால், படிக்கவில்லை அனுப்பி வையுங்கள் படிக்கிறேன் என்கிறார்கள். நான் எழுதியதை எதுவுமே படிக்காமல் இப்படி கேட்கிறார்கள்.
உலகில் தமிழர்கள் எட்டரை கோடி பேர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு புத்தகம் 5000 பிரதி விற்பது அவ்வளவு கடினமாக உள்ளது. எவ்வளவோ விழாக்கள் நடக்கிறது. யார் யாரோ ஒன்றுக்கும் உதவாத சால்வைக்கும் பூங்கொத்துக்கும் எவ்வளவோ செலவு செய்கிறார்கள். இவற்றை தவிர்த்துவிட்டு விழாக்களில் புத்தகம் பரிசளிக்கலாம். விவசாயியும், எழுத்தாளனும் வறுமையில் இருந்த எந்த நாடும் உருப்படாது. ஒரு சாதாரண நகைச்சுவை நடிகனின் தினசரி சம்பளம் இரண்டு லட்ச ரூபாய். அறுபது ஆண்டுகள் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் கூட இப்படி சம்பாதிக்க முடிகிறதா? முடிவதில்லை. இந்த நாடு உருப்படுமா?" என்றார் ஆதங்கத்துடன்.!