சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 87வது பிறந்த நாள் வருகிற அக்டோபர் முதல் தேதி வருகிறது. அன்றைய தினம் சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சென்னை மியூசிக் அகாடமியில் சிவாஜி விருது வழங்கும் விழா நடக்கிறது. திரையுலகில் சாதித்த சாதனையாளர்களுக்கு சிவாஜி விருது வழங்கப்படும். இந்த ஆண்டு சிவாஜி விருது அவரின் மூத்த தீவிர ரசிகர்கள் இருவருக்கு வழங்கப்படுகிறது. ஒருவர் சென்னையை சேர்ந்த டி.வி.சந்திரசேகரன், இன்னொருவர் பெங்ளூரைச் சேர்ந்த மா.நட்ராஜ். இந்தியாவிலேயே ஒரு உயரிய விருது ரசிகர்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
இவர்கள் தவிர இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், நடிகை ஊர்வசி சாரதா, ஒளிப்பதிவாளர் எம்.சி.சேகர், நடிகை குலசகுமாரி, பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, நடிகர் டைபிஸ்ட் கோபு ஆகியோருக்கு சிவாஜி நினைவு பரிசு வழங்கப்படுகிறது. விழாவிற்கு டோஹா வங்கியின் முதன்மை செயல் அதிகாரி ஆர்.சீத்தாரமான் தலைமை தாங்கி விருகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு, துஸ்யந்த் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.