மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலசேகரன் இயக்கிய ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் நாயகியாக நடித்தவர் சானியதாரா. அதையடுத்து பனிவிழும் மலர்வனம், ஜிகினா உள்பட சில படங்களில் நடித்தவர், பா.விஜய்யுடன் 30 ரூபாய் சிடி, ஹரிகுமாருடன் சங்கராபுரம் ஆகிய படங்களிலும் நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களும் இன்னும் ரிலீசாகவில்லை. இதையடுத்து சானியதாரா கமிட்டாக இருந்த சில படங்கள் கிடப்பில் போடப்பட்டதால் அவரது கைவசம் புதிய படவாய்ப்புகள் இல்லை.
அதோடு, தெலுங்கு பெண்ணான சானியதாரா தனது தாய்மொழிப்படங்களில் நடிக்கவும் தீவிர முயற்சி எடுத்தார். ஆனால் ஒர்க்அவுட்டாகவில்லை. அதனால் சினிமா உலகமே தன்னை வீட்டிற்கு அனுப்புவதற்கு முன்பே தானே சென்று விடுவதுதான் நல்லது என்று கூடிய விரைவில் நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு திருமணம் செய்து கொள்ளதிட்டமிட்டுள்ளாராம் சானியதாரா.
அதன்காரணமாக, இதுவரை ஒரு மேனேஜரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த சானியதாரா, இப்போது அவரைவிட்டு விலகி சென்று விட்டார். அதோடு, தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நபருடன் இப்போது நெருக்கமாகி விட்ட சானியதாரா, அதுகுறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருக்கிறாராம். ஆனபோதும், தன்னை சுற்றியிருக்கும் சினிமா நண்பர்களிடம் விரைவில் நான் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்குப்போடப்போகிறேன் என்று தெரிவித்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.