ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'அனேகன்' படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்க உள்ள புதிய படத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய 'மாற்றான், அனேகன்' ஆகிய இரண்டு படங்களையும் அந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது. கே.வி.ஆனந்த் இயக்க உள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின, அதை கே.வி.ஆனந்த் மறுத்திருந்தார்.
இப்போது அந்தப் படத்தில் ஆர்யா நடிக்கப் போவதாக கடந்த சில நாட்களாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த 'மதராசப்பட்டிணம்' படத்தில் ஆர்யா தான் நாயகனாக நடித்திருந்தார். ஆர்யா கடைசியாக நடித்த ''யட்சன், வாசுவும் சரவணணும் ஒண்ணா படிச்சவங்க, புறம்போக்கு, மீகாமன், இரண்டாம் உலகம், ஆரம்பம்” ஆகிய ஆறு படங்களுமே தோல்விப் படங்களாகத்தான் அமைந்தது. 'ஆரம்பம்' படத்திற்கு முன் வெளிவந்த 'ராஜா ராணி' படம் தான் கமர்ஷியல் ரீதியாக ஆர்யா நடித்த கடைசி வெற்றிப் படம்.
ஆர்யா தற்போது நடித்து வரும் 'இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் டேய்ஸ் தமிழ் ரீமேக்' ஆகிய படங்கள் எதிர்பார்ப்பில் உள்ள படங்களாக இருந்தாலும் 'இஞ்சி இடுப்பழகி'யில் அனுஷ்காவுக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. 'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் ஆர்யாவைத் தவிர பாபி சிம்ஹா, ராணா ஆகியோரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். அதனால் தனி ஹீரோவாக, ஆக்ஷன் கமர்ஷியலாக ஒரு படத்தில் நடித்து தனக்கு திருப்புமுனையைத் தேடிக் கொள்ள ஆர்யா விரும்பி வருகிறார். அதனால்தான் கே.வி.ஆனந்த் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க அவரே அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்.