ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவுண்டமணி ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் 49ஓ தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து அவர் நடிக்கும் படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. முன்பு கவுண்டமணியுடன் செந்தில் கூடவே வருவார். இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் வருகிறவர் பாடகர் வேல்முருகன்.
"வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு"..., "ஒத்த சொல்லால என் உசிரரெடுத்து வச்சிப்புட்டா", "கருப்பு நிறத்தழகி" உள்பட ஏராளமாக ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் பாடகர் வேல்முருகன். நாட்டுப்புற பாடலுக்கு அவரைத்தான் அழைக்கிறார்கள். சில படங்களில் பாடல் காட்சியில் ஹீரோவுடன் சேர்ந்து ஆடியிருக்கிறார். இப்போதுதான் முதன் முறையா நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
நடிக்கச் சொல்லி ஏராளமான அழைப்புகள் வந்தது. நான்தான் பாடுறதுதான் என்னோட தொழில்னு சொல்லி அவற்றை ஏற்கவில்லை. ஆனால் கவுண்டமணி சாருடன் கூடவே வரும் கேரக்டர் என்றதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். காரணம் நான் அவரின் தீவிர ரசிகன். தொழிலதிபரான அவருடனேயே வரும் போட்டோகிராபர் கேரக்டர். எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது படத்துக்கு பாடத்தான் போனேன் இயக்குனர் பாலமுருகன்தான் நடிக்க வைத்திருக்கிறார். தொடர்ந்து நடிப்பேனான்னு தெரியாது. நடிச்சாலும் பாட்டுதான் நமக்கு பர்ஸ்ட், நடிப்பு நெக்ஸ்டுதான்" என்கிறார். வேல்முருகன்.