வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
அஜித்தைப் போலவே கார் ரேஸில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் ஜெய். சில வருடங்களுக்கு முன்பே கார் ரேஸில் கலந்து கொள்வதை அஜித் நிறுத்திவிட்டார். ஆனால், ஜெய் இன்னமும் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். அவர் நடிக்கும் படங்களின் பிரமோஷன்களுக்குக் கூட வராத பழக்கம் உடையவர் கார் ரேஸில் மட்டும் கலந்து கொள்கிறாரே என்று அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்தான் கவலைப்பட வேண்டும். சமீபத்தில் நடந்த ஃபார்முலா 1600 கார் ரேஸ் பந்தயத்தில் ஏழாவதாக ஆரம்பித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்ததாக ஜெய் தெரிவித்துள்ளார்.
ஜெய்க்கு கார் ரேஸில் கலந்து கொள்வதற்கு யார் 'ஸ்பான்சர்' செய்கிறார்கள் தெரியுமா?. பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன்தான் அவருக்கு ஸ்பான்சர் செய்கிறார். அது குறித்து ஜெய்யே குறிப்பிட்டு வருண்மணியனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். “என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து ஸ்பான்சர் செய்து வரும் வருண்மணியனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது,” என ஜெய் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு பந்தயத்திற்கு இப்போதே ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். சிங்கப்பூரில் நடக்க உள்ள ஃபார்முலா ஒன் கார் ரேஸைப் பார்ப்பதற்காக தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள ஜெய் நடிப்பில் அடுத்து 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், புகழ்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.