ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, தொட்டால் தொடரும் போன்ற படங்களை தயாரித்தவர் துவார் சந்திரசேகர். இவர், வினய், பாயல் பட், அர்ச்சனா குப்தா, சத்யன் நடிப்பில் இருவர் உள்ளம் என்ற படத்தையும் தயாரித்தார். கேமராமேன் ரமேஷ் அந்த படத்தை இயக்கினார். விஜய் ஆண்டனி இசையமைத்தார். வினய் மிரட்டல் படத்தில் நடித்து வந்த சமயம் என்பதால், அதற்கடுத்து இந்த படம் வெளியாகி தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால், அப்படத்தை தயாரித்து முடித்த துவார் சந்திரசேகர், தற்போது கவுண்டமணி நடித்து வெளியாகியுள்ள 49 ஓ படத்தை தயாரித்துள்ள ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் டாக்டர் சிவபாலனிடம் அந்த படத்தை கைமாற்றி விட்டு விட்டார். அவர் அப்போது 49 ஓ படத்தை தயாரித்து வந்ததால் இருவர் உள்ளம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தவர், இப்போது 49 ஓ படம் ரிலீசாகி விட்டதால் அடுத்தபடியாக இருவர் உள்ளம் படத்தை வெளியிடுகிறாராம். ஆயிரத்தில் இருவர், ஆள் அம்பு சேனை ஆகிய படங்களில் நடித்து வரும் வினய், அந்த படங்கள் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியிருப்பதால், இந்த இருவர் உள்ளம் படமாவது வெளியாகி தனது மார்க்கெட்டை தாங்கிப்பிடிக்குமா? என்று எதிர்பார்த்திருக்கிறார்.