ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு பீல்டில் ஓரளவு தனது காலை அழுத்தமாக ஊன்றிவிட்ட சித்தார்த் இந்தியில் கூட இரண்டு படம் நடித்துள்ளார். அவ்வளவு ஏன் 'மிட்நைட் சில்ட்ரன்ஸ்' என்கிற ஆங்கில படத்தில் கூட நடித்துவிட்டார். இன்னும் அவர் கால் வைக்காதது கன்னடம் மற்றும் மலையாள திரையுலகில் தான். இதில் கன்னடத்தில் பெரிதாக ஆர்வம் காட்டாத சித்தார்த், எப்படியும் மலையாளத்தில் நடித்துவிடவேண்டும் என கடந்த ஒரு வருடமாகவே தீவிரம் காட்டிவந்தார். அதற்கு அவ்வப்போது தூபம் போட்டு வந்தது 'காவியத்தலைவன்' படத்தின் மூலம் ஏற்பட்ட மலையாள நடிகர் பிருத்விராஜின் நட்பு.
அந்தவகையில் சித்தார்த்தின் முதல் மலையாள பிரவேசம் 'குமார சம்பவம் என்கிற படத்தின் மூலம் நிகழ இருக்கிறது. இந்தப்படத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்க, சித்தார்த்துக்கும் மிக முக்கியமான வேடமாம். இந்தப்படத்தை இயக்குபவர் பிரபல விளம்பர பட இயக்குனரான ரதீஷ் அம்பாட். இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2௦16 ஆரம்பத்தில் துவங்கப்பட இருக்கிறது. வடமொழி கவியான காளிதாசன் கைவண்ணத்தில் உருவான சிவ பார்வதி காதல் இலக்கியம் தான் 'குமார சம்பவம்'. இந்த பெயர் முருகனின் பிறப்பை உணர்த்துகிறது. ஆனால் படத்திற்காக இந்த டைட்டிலை எடுத்து வைத்திருக்கிறார்களா என்பது இனிமேல் தான் தெரியவரும்.