ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. வழக்கமாக தேர்தல் நடைபெறும்போது பெரிய பரபரப்பு இருக்காது. அந்தளவுக்கு நடிகர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவியது. சரத்குமாரையும், ராதாரவியையும் எதிர்க்கும் விஷால் தனக்குப் பின்னால் சிலரை திரட்டி இந்த வருட தேர்தலில் போட்டியிட இருக்கிறார். எனவே இம்முறை கடும் போட்டி இருக்கும் என்பது உறுதி.
இந்த தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட உள்ள நடிகர் விஷால் மற்றும் நாசர் தலைமையிலான அணி கமல், ரஜினி உட்பட பல முன்னணி நட்சத்திரங்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது. இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் போட்டியிடுகிறார் நடிகர் சிம்பு. சரத்குமார், ராதாரவி அணியில் நீண்ட வருடங்களாக நடிகர் சங்கத்தின் கமிட்டி மெம்பராக இருந்துவருகிறார் சிம்பு. எனவே, இந்த வருட தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு சிம்புவை போட்டியிட வைக்க தீர்மானித்துள்ளனர். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தற்போதைய தலைவர் சரத்குமார் இதை அறிவித்தார். இதனை நடிகர் சிம்புவும் உறுதி செய்துள்ளார்.
சிம்பு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை ஏற்கனவே தெரிந்து வைத்துள்ள விஷால் அணியினர், அவரை எதிர்த்து கார்த்தியை களத்தில் இறக்க தீர்மானித்துள்ளனர். முன்னணி நடிகர்கள் போட்டிக்களத்தில் இருப்பதாக் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சூடுபிடித்துள்ளது.