ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பசவா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 4-ந்தேதி வெளியான படம் பானு. இந்த படத்தை ஜி.வி.சீனு தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார். நந்தினிஸ்ரீ, சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகர், போண்டாமணி உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், செப்டம்பர் 4-ந்தேதி தமிழகமெங்கும் 100 தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 21 தியேட்டர்களில்தான் பானு படம் வெளியானது. மீதமுள்ள தியேட்டர்களில் வெளியாகவில்லை.
இதுபற்றி பானு படத்தின் இயக்குனர் ஜி.வி.சீனு கூறுகையில், செப்டம்பர் 4-ந்தேதி எந்த படமும் ரிலீசாகாது என்ற நிலை இருந்தது. பின்னர் பாயும்புலி, சவாலே சமாளி போன்ற படங்கள் ரிலீசாகின. அந்த படத்தோடு எனது பானு படமும் ரிலீசானது. முன்னதாக, சிவா என்றொரு மீடியேட்டர் தியேட்டர்களை பிடித்துத்தருவதாக சொன்னதை நம்பி தமிழ்நாடு முழுக்க 100 தியேட்டர்களில் பானு படத்தை வெளியிட ப்ளான் பண்ணினேன். ஆனால் 21 தியேட்டர்கள்தான் எனக்கு கிடைத்தது. அப்படி எனக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் போனதற்கு அந்த மீடியேட்டர் சிவாதான் காரணம். சிட்டியில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் பெரிய படங்களுக்கு போய் விட்டதாக சொல்லிவிட்டார். எல்லா ஏரியாவிலும் ரிலீஸ் பண்ணலாம் என்று சொல்லி கடைசி நேரத்தில் பல ஏரியாக்களில் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்து விட்டார்.
குறிப்பாக, சேலம், கோவை, திருச்சி, வட ஆற்காடு, தென் ஆற்காடு போன்ற ஏரியாக்களில் இன்னும் பானு படத்தை ரிலீஸ் பண்ண முடியவில்லை. மேலும் நேற்று 11ம்தேதி 30 தியேட்டர்களில் வெளியிடலாம் என திட்டமிட்டேன். ஆனால் சென்னையிலுள்ள 4 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் பண்ண முடிந்தது. அந்த நபர் மற்ற தியேட்டர்களை லாக் பண்ணி விட்டார்.
அதோடு எனது பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். ஒரு மீடியேட்டர் ஒரு டைரக்டரோட வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி ஆயிடுச்சு. நான் இரண்டு வருடமாக கஷ்டப்பட்டு இந்த படத்தை தயாரித்து, இயக்கினேன். தியேட்டர் வாங்கித்தரேன்னு காசு வாங்கிட்டு இந்த சிவா என்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டார். அதனால் விநியோகஸ்தர்களை சந்தித்து பேசி அடுத்த வாரம் மற்ற ஏரியாக்களில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றிருக்கிறேன். ஒரு டைரக்டரின் நிலையை மக்கள்தான் தீர்மானிக்கனும். ஆனா ஒரு மீடியேட்டர் நிர்ணயிக்கிற மாதிரி எனது நிலை ஆகி விட்டது என்று சொல்லி பீல் பண்ணுகிறார் டைரக்டர் ஜி.வி.சீனு.