வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
யாரடி நீ மோகினி படத்தில் துறுதுறு பெண்ணாக அறிமுகமானவர் சரண்யா மோகன். அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு, பஞ்சாமிர்தம் உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். வேலாயுதம், ஆறுமுகம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோக்களின் தங்கையாக நடித்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணாவிற்கும் திருமணம் செய்ய பெரியவர்கள் பார்த்து முடிவு செய்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.
நேற்று காலை சரண்யாமோகன், அரவிந்த் கிருஷ்ணா திருமணம் ஆலப்புழயில் உள்ள கோவிலில் எளிமையாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். அடிப்படையில் டான்சரான சரண்யா, இனி சினிமாவில் நடிப்பதில்லை என்றும் கணவருடன் திருவனந்தபுரத்தில் செட்டிலாவது என்றும் முடிவு செய்திருக்கிறார். அங்கு ஒரு நடன பள்ளி துவங்கவும் முடிவு செய்திருக்கிறார்.