ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜெயம்ரவியை வைத்து அவரது அண்ணன் மோகன்ராஜா இயக்கி வெளியாகியுள்ள படம் தனி ஒருவன். இந்த படத்திற்கு முன்பு வரை ரீமேக் ராஜாவாக இருந்த மோகன்ராஜா முதன்முறையாக சொந்த கதையில் படமெடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றியை ,மீடியாக்களுடன் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அப்போது, டைரக்டர் மோகன்ராஜா பேசத் தொடங்கும்போதே கண்கலங்கி விட்டார். அதைப்பார்த்து மேடையில் அமர்ந்திருந்த அவரது தம்பியான ஜெயம்ரவியும் கண்கலங்கினார்.
இந்த வெற்றி விழாவில் ஜெயம்ரவி பேசுகையில்,
இத்தனை வருசமா என் அண்ணனுக்கு சந்தோசமே இல்லை. தம்பி ஜெயிச்சதைப் பார்த்துதான் அவர் சந்தோசப்பட்டு வந்தார். எனக்கு 12 வயதில் அரங்கேற்றம் நடந்தது. அதைப்பார்த்துட்டு ஒரு வாரமா அதைப்பத்தியே பேசிவந்தவர் என் அண்ணன். அந்த அளவுக்கு தம்பி வெற்றியை மட்டுமே இதுவரை அவர் கொண்டாடி மகிழ்ந்து வந்தார். என் சந்தோசம்தான் அவரது சந்தோசமாக இத்தனை வருசமா இருந்துட்டு வந்தது. ஆனா இன்னைக்குத்தான் உண்மையாக மனசார அவர் தனது சந்தோசத்தை கொண்டாடுகிறார். எல்லோருக்கும் அவரை ரீமேக் ராஜாவாகத்தான் தெரியும். அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் நான் அவர் ஒருநாள் வருவார். அப்போது அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும் என்று மனசுக்குள் சிரித்துக்கொள்வேன். அந்த நாள் இந்த தனி ஒருவன் படம் மூலம் வந்து விட்டது.
நான் இந்த படத்தின் ரிலீசுக்கு முன்பே சொன்னேன். எங்க பேமிலிக்கு மட்டுமே தெரிந்த சீரியஸ் டைரக்டர் ராஜா, இந்த படத்துக்கு பிறகு உலகத்துக்கே தெரியப்போகிறார் என்று சொன்னேன். அது இப்போது நடந்து விட்டது. மேலும், என் அண்ணன் ராஜாவை நேரடிப்படம் எடுங்கள் என்று சொன்னது ஏஜிஎஸ் பிலிம்ஸ் அகோரம் அவர்கள். அதனால் என் அண்ணனை ஒரு நேரடிப்படம் எடுக்க வைத்து அவருக்குள் இருந்த ஒரு சீரியசான இயக்குனரை வெளிக்கொண்டு வந்த ஏஜிஎஸ் பிலிம்சுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த படத்தை கதையாக மட்டுமே சொன்னால் யாருக்கும் புரியாது. திரைக்கதை வடிவம்தான் இந்த படம். இதை மற்ற நடிகர்கள் புரிந்து கொள்வதே கடினம். நான் அவரது தம்பி என்பதினால்தான் என்னால் அவர் சொல்ல வருவதை புரிந்து கொள்ள முடிந்தது. அதோடு மியூசிக் டைரக்டர் ஹிப்பாப் தமிழா ஆதியும் என் அண்ணன் சொன்னதைக்கேட்டு இரண்டு அற்புதமான பாடலைப் போட்டுக்கொடுத்தார். ஒருவகையில் அவரும் எங்கள் பேமிலி மாதிரிதான். அதனால்தான் என் அண்ணன் சொன்னதை புரிந்து கொண்டு அதற்கேற்ற பாடல்களை உருவாக்கிக்கொடுத்தார்.
என் அண்ணன் நிறைய கன்பியூஸ் பண்ணிக்கொள்வார். ஆனால் முடிவில் பார்த்தால் அவர் தைரியமாக சொல்லும் விசயம்தான் சரியானதாக இருக்கும். அதுதான் இந்த தனி ஒருவன் படமும். அதே மாதிரி இந்த படத்தில் தம்பி ராமைய்யா சார் நடித்துள்ள கேரக்டர் மாதிரி உலகத்தில் எந்த அப்பாவும் இருக்க முடியாது. அப்படியொரு கேரக்டர் கிரியேட் பண்ணி அதை அழகாக படமாக்கியிருந்தார். அதோடு, இந்திய சினிமாவிலேயே பிலிமில் எடுக்கப்பட்ட கடைசி படம் தனிஒருவன்தான்.