விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்ய உள்ளார். சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்தார்.
சில, பல மாதங்களுக்கு முன்னர் நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை யாரும் மறந்திருக்க மாட்டார். வடிவேலு வீட்டின் மீது கல்லை எறிந்து பெரும் ரகளை செய்தனர் தே.மு.தி.க.,வினர். இதனால் கொதித்து போன வடிவேலு வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து நானே போட்டியிட்டு அவரை தோற்கடிப்பேன் என்று ஆவசேமாக கூறியிருந்தார். இப்போது தேர்தலும் வந்துவிட்டது. வடிவேலு, விஜயகாந்த்தை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வடிவேலு இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தி.மு.க.,வுக்கு அதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று(21.03.11) சந்தித்து பேசினார் வடிவேலு. வருகிற 23ம் தேதி முதல் தனது பிரச்சார பயணத்தை தொடங்கும் வடிவேலும் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க இருக்கிறார்.