'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்ய உள்ளார். சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்தார்.
சில, பல மாதங்களுக்கு முன்னர் நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை யாரும் மறந்திருக்க மாட்டார். வடிவேலு வீட்டின் மீது கல்லை எறிந்து பெரும் ரகளை செய்தனர் தே.மு.தி.க.,வினர். இதனால் கொதித்து போன வடிவேலு வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து நானே போட்டியிட்டு அவரை தோற்கடிப்பேன் என்று ஆவசேமாக கூறியிருந்தார். இப்போது தேர்தலும் வந்துவிட்டது. வடிவேலு, விஜயகாந்த்தை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வடிவேலு இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தி.மு.க.,வுக்கு அதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று(21.03.11) சந்தித்து பேசினார் வடிவேலு. வருகிற 23ம் தேதி முதல் தனது பிரச்சார பயணத்தை தொடங்கும் வடிவேலும் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க இருக்கிறார்.