ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆரம்பத்தில் கதைகளில் மட்டுமே தனிக்கவனம் செலுத்தி வந்த சிவகார்த்திகேயன் சமீபகாலமாக கதாநாயகி, டெக்னீஷியன்கள் என அனைத்து விசயங்களிலும் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது தனது மேனேஜர் ராஜா தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தான் நடிக்கும் புதிய படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல்பூக்குட்டி, அனிருத் பிரபல டெக்னீஷியன்களுடன் களமிறங்கியிருப்பவர், கதாநாயகி விசயத்திலும் முன்னணியில் இருக்கும் பிரமாண்டமான நடிகைகளுக்கு வலைவீசி வந்தார்.
காரணம், இப்படம் இதுவரை தான் நடித்ததில் பிரமாண்டமான படம் என்பதால். தன்னுடன் டூயட் பாடும் நடிகையும் பிரமாண்ட நடிகையாக ரசிகர்களின் பேராதரவு பெற்ற நடிகையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் தற்போது முன்வரிசையில் இருக்கும் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா, எமி ஜாக்சன் என பலரிடம் கால்சீட் கேட்க தனது மேனேஜரை அனுப்பி வைத்தார். ஆனால், இந்த நடிகைகள் அனைவருமே பிசியானவர்கள் என்றபோதும் எமிஜாக்சனின் கால்சீட் கிடைத்துள்ளதாம்.