ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாண்டியநாடு படத்தில் விஷால் பயந்த சுபாவத்துடன் இருப்பார். முதல் காட்சியிலேயே ஒரு சிறு நடிகரிடம் அடி வாங்குவது போல் காட்சி வரும். பாயும்புலி யில் காஜல் மிகவும் பயந்த சுபாவத்துடன் வருகிறார். சாலையில் போகவே பயப்படுவாராம். சாலையில் டூவீலரை திருப்பவே பயப்படுவாராம். கடக்க சொல்ல வேண்டுமா?. அப்படி ஒரு பயம். மிரளும் மானைப் போல ஒரு கேரக்டராம். இந்த பயந்த சுபாவம் பாடலிலும் எதிரொலிக்குமாம்.
வைரமுத்து கூட சாலையின் குறுக்கே கடக்கும் பயந்த பெண்ணைப் பற்றி 'யாரந்த முயல்குட்டி
'யாரந்த முயல்குட்டி, உன் பேரென்ன முயல்குட்டி ? வெள்ளை வெள்ளையாய், வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய், யாரந்த முயல்குட்டி 'என்று காஜலை மனதில் வைத்துத் தான் பாடல் எழுதியிருக்கிறார்.
பாயும்புலியில் 45 நிமிட க்ளைமாக்ஸ்: சுசீந்திரன் நான்மகான் அல்ல படத்தில் 22நிமிடம் பரபரப்பு க்ளைமாக்ஸ் அமைத்து இருப்பார். வசனத்தைவிட காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அதேயோல் பாயும்புலி யில் சுமார் 45 நிமிடங்கள் பரபரப்பு காட்சிகளைத் தோரணமாக்கி க்ளைமாக்ஸ் அமைத்திருக்கிறாராம். அது நிச்சயம் பேசப்படும் என்றும் விஷாலின் வணிக மதிப்பின் உயரம் சில அங்குலமாவது உயரும் என்றும் நம்புகிறார் இயக்குநர் சுசீந்திரன்.