ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சிம்பு, நயன்தாரா நடித்துள்ள படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கி உள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்துள்ளார், குறளரசன் இசை அமைத்துள்ளார். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அதன்பிறகு வாலு பட பிரச்னை, இசை அமைப்பில் தாமதம், சிம்புவின் வழக்கமான அக்கறையின்மை காரணமாக தாமதமானது.
இயக்குனர் பாண்டிராஜ், ''இது நம்ம ஆளு'' படத்தை விட்டு விட்டு அதன் பிறகு ''பசங்க 2'' படத்தை எடுத்து முடித்துவிட்டு விஷால் படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார். வாலு படப் பிரச்னை முடிந்து விட்டதால் இப்போது இது நம்ம ஆளு படத்தை விரைவாக முடித்து வெளியிட முடிவு செய்திருக்கிறார் சிம்பு. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் பாக்கி இருக்கிறது. அதை இயக்கித் தர இயக்குனர் பாண்டிராஜ் ஒப்புக் கொண்டாலும் நயன்தாரா ஒப்புக்கொள்ளவலில்லை. வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார். இதனால் டி.ராஜேந்தர், நயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறியதாக கூறப்பட்டது.
இதுகுறித்து சிம்பு கூறியிருப்பதாவது: நயன்தாரா பற்றி புகார் எதுவும் கொடுக்க வில்லை. அவர் இன்னும் இரண்டு பாடல் காட்சிகளில் நடித்து தரவேண்டும். அவரிடம் தேதி கேட்க யாரை அணுக வேண்டும் என்ற தெரியவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தை அப்பா அணுகி பாடலுக்கு தேதி வாங்கித் தாருங்கள். அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை உங்களிடமே கொடுத்து விடுகிறோம் என்று அப்பா சொன்னார். அதை எழுத்து பூர்வமாக கொடுங்கள் என்றார்கள். அதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்தோம். நயன்தாரா தேதி கொடுத்தால் பாடல்களை படம்பிடித்து படத்தில் சேர்ப்போம். இல்லாவிட்டால் பாடல்கள் இல்லாமலே படத்தை வெளியிடுவோம் என்றார் சிம்பு.