ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராம், பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மயக்கமென்ன, தனி ஒருவன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராம்ஜி. திறமையான ஒளிப்பதிவாளரான இவர் ஒரு படத்தை ஒரு வருடத்துக்கு மேல் எடுப்பார், பிலிமில்தான் படம்பிடிப்பேன் என்று அடம்பிடிப்பார். டிஜிட்டல் கேமராவில் படம் எடுக்கத் தெரியாது. பெரிய இயக்குனர்களிடம்தான் பணியாற்றுவார் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் ராம்ஜி மீது உண்டு.
அதற்கு விளக்கம் அளித்து ராம்ஜி அளித்த பேட்டி: என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு நன்றாத தெரியும். நான் நினைத்தால் ஆண்டுக்கு 5 படங்களில் பணியாற்றி கோடிக் கணக்கில் சம்பாதிக்க முடியும். ஆனால் எனக்கு என் கலைதான் முக்கியம். அதனால் நல்ல கதைகளை தேர்வு செய்து வேலை செய்கிறேன். படம் ஆரம்பிக்கும்போது 3 மாதத்தில் முடித்து விடலாம், என்றுதான் இயக்குனர்கள் ஆரம்பிக்கிறார்கள். பிறகு பல காரணங்களால் தள்ளிப்போகிறது. அதற்கு நான் எப்படி காரணமாக முடியும். எந்தப் படமும் ஒருநாள்கூட என்னால் தாமதமானது இல்லை. தனி ஒருவன் படத்தை 6 மாதத்தில் முடித்துவிடலாம் என்று மோகன் ராஜா கூறினார். அது முடிய ஒண்ணரை வருஷமாச்சு அதற்கு நான் என்ன செய்ய முடியும்.
எந்த படமாக இருந்தாலும் பிலிமில் எடுக்கத்தான் எனக்கு பிடிக்கும். எனது ஒளிப்பதிவில் கருப்பு கலர் தூக்கலாக இருக்கும். அதை பிலிமில்தான் கொண்டு வரமுடியும். அதற்காக எனக்கு டிஜிட்டல் கேமரா தெரியாது என்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதற்காகவே தனி ஒருவன் படத்தில் நான்கு இடத்தில் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தியிருக்கிறேன். பிலிமுக்கு நிகராக படம்பிடித்திருக்கிறேன். என் மீது குற்றம் சொல்கிறவர்களால்கூட அது எந்த இடம் என்பதை கண்டுபிடிக்க முடியாது.
ராம் படம் ஆரம்பிக்கும்போது அது சிறிய படம்தான். அதனால் நான் பெரிய படங்களில்தான் பணியாற்றுவேன் என்பதில்லை. நல்ல கதையோடு சிறிய படம் வந்தால் டிஜிட்டலில் வேலை செய்து தரவும் தயாராக இருக்கிறேன் என்கிறார் ராம்ஜி.