ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கவியரசர் கண்ணதாசன் மீது மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்டவர். கடந்த 2004ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன்-விஸ்நாதன் அறக்கட்டளையை தொடங்கினார். கண்ணதாசன் புகழ் பரப்ப தோற்றுவிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் கவியரசு விழாவை நடத்தி வந்தார்.
தற்போது எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்து விட்டதால் அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அறக்கட்டளை நிர்வாகிகளின் கூட்டம் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. இதில் புதிய தலைவராக இலக்கியவாதி ப.லெட்சுமணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எஸ்.விஸ்வநாதன் நிறுவனத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
செயலாளராக ஏவிஎம்.சரவணன், இணை செயலாளர்களாக எம்.ரவிச்சந்திரன், பொருளாளராக எஸ்.பி.முத்துராமன், அறங்காவலர்களாக எம்.ஏ.எம்.ராமசாமி, நல்லி குப்புசாமி, வள்ளி அழகப்பன், எம்.முரளி, எம்.கே.மணி, டி.ராமலிங்கம், எஸ்.கண்ணன் ஆகியோர் தொடர்ந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு கவியரசு விழாவை அக்டோபர் 17ந் தேதி ராஜா அண்ணாமலைபுரம் ராஜா முத்தையா அரங்கில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.