ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
டோலிவுட்டின் பவர்ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தற்போது சர்தார் படத்தில் மும்முரமாக நடித்து வருகின்றார். பவன் கல்யாண் நடிப்பில் சூப்பர் ஹிட்டானா கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் சர்தார் படத்தை இயக்குநர் பாபி இயக்குகின்றார். இப்படத்தைத் தொடர்ந்து பவன் கல்யாண் கபார் சிங் படத்தின் இயக்குநர் ஹரீஸ் சங்கருடன் இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது ஹரீஸ் சங்கர் தான் இயக்கிய சுப்ரமணியம் பார் சேல் படத்தின் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளார். அப்படத்திற்கு பின்னர் ஹரீஸ் சங்கர் பவன் கல்யாணை மனதில் வைத்து ஒரு கதையை தயார் செய்துள்ளாராம். தயாரிப்பாளர் தில் ராஜு பவன் கல்யாணுடன் ஹரீஸ் சங்கர் மீண்டும் இணையும் படத்தை தயாரிக்கவுள்ளார். சர்தார் படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகளை நிறைவு செய்துவிட்டார். நாயகி காஜல் அகர்வாலுடன் அவர் நடிக்கவிருக்கும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தை பவன் கல்யாண் முடித்த பின்னர் அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.