ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் படைப்பாக்கம் வரவரக் குறைந்து விட்டது என்பதற்கு, பழைய படங்களின் தலைப்பை மீண்டும் புதிய படங்களுக்கு வைப்பதை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம். எங்களது கதைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது என அந்தப் படங்களின் இயக்குனர்கள் மீண்டும் பழைய தலைப்பை வைப்பதைப் பற்றிக் காரணத்தையும் சொல்வார்கள். மிஞ்சிப் போனால் ஒரே ஒரு வார்த்தை அல்லது இரண்டு வார்த்தை, அதற்கு மேல் எல்லாம் நீளமாக யாரும் அடைட்டிலை வைப்பதில்லை. ஒரு தமிழ்ப் பெயரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை, அவ்வளவு அவசரம்.
நாளை செப்டம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள மூன்று படங்களின் தலைப்பு பழைய படங்களின் தலைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால், காஜல் அகர்வால் நடித்து வெளிவர உள்ள 'பாயும் புலி' படத்தின் பெயரில் ஏற்கெனவே ரஜினிகாந்த், ராதா நடித்து 1983ம் ஆண்டு ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்றது. அசோக் செல்வன், பிந்து மாதவி நடித்து நாளை வெளிவர உள்ள 'சவாலே சமாளி' என்ற பெயரில் சிவாஜிகணேசன், ஜெயலலிதா நடித்து 1971ம் ஆண்டு ஒரு படம் வெளிவந்தது. நடன இயக்குனர் ஸ்ரீதர், ஸ்பூர்த்தி நடித்து நாளை வெளிவர உள்ள 'போக்கிரி மன்னன்' படப் பெயரில் இரண்டு பழைய படங்களின் தலைப்பு அடங்கியுள்ளது. விஜய், அசின் நடிக்க 'போக்கிரி' படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது. ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு நடிக்க 'மன்னன்' படம் 1992ம் ஆண்டு வெளிவந்தது.
அடுத்து ரஜினிகாந்த் நடித்துள்ள 'போக்கிரி ராஜா' படப் பெயரில் ஜீவா, ஹன்சிகா நடிக்கும் புதிய படம் ஒன்று ஆரம்பமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இன்னும் எத்தனை ரஜினி படப் பெயர்களுக்கு நமது ஹீரோக்கள் ஆசைப்படப் போகிறார்களோ...?