ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
எந்த ஒரு அறிமுக இயக்குனரும் எடுக்காத துணிச்சலான, ஆனால் மிகவும் ரிஸ்க்கான முடிவை எடுத்துள்ளார் மம்முட்டி படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் ஷாஜி.. அறிமுகமாகும்போதே மம்முட்டி படத்தை இயக்குவது துணிச்சல் என்றால், அந்தப்படத்தில் மம்முட்டியை மூன்று வேடங்களில் நடிக்க வைப்பது ரிஸ்க் இல்லாமல் வேறென்ன..? ஆனால் அந்த ரிஸ்கை எடுக்கும் தைரியம் தந்தவர் கதாசிரியர் பென்னி பி.நாரயம்பலம். மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்ட்டேட் காதசிரியர்களில் ஒருவரான இவர் எட்டு பிளாக் பஸ்டர்களுக்கும், ஏழு சூப்பர்ஹிட்டுகளுக்கும் சொந்தக்காரர்.
அதுமட்டுமல்ல மம்முட்டிக்கு ஏற்கனவே 'அண்ணன் தம்பி' என்கிற டபுள் ஆக்சன் ஹிட் படத்திற்கு கதை கொடுத்தவர் இவர்தான். ஆக ஷாஜி-பென்னி இருவரும் மம்முட்டியிடம் இந்த கதையை சொன்னதும், அவர் மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டதில் வியப்பில்லை.. ஒரு ஹீரோவுக்கு மூன்று வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு என்பது அரிதாக கிடைக்கும் பொக்கிஷம்.. இன்னும் மோகன்லாலுக்கே கிடைக்காத ட்ரிபிள் ஆக்சன் ரோலை 2009ல் 'பாலேரி மாணிக்கம்' படத்திலேயே மம்முட்டி நிகழ்த்தி காட்டிவிட்டார்.
இது மூன்று வேடங்களில் மம்முட்டி நடிக்கும் இரண்டாவது படம். மூன்று வேடங்கள் என்பதால் இளைஞர், வயதானவர் அல்லது அப்பா, மகன்கள் என்கிற ரோல்கள் எதுவும் இல்லை.. மூன்று கேரக்டர்களுமே 50 வயதில் இருப்பவர்கள் தான்.. அதற்கான காரணம் தான் மொத்தப்படமும் என்கிறார் பென்னி பி.நாரயம்பலம். வரும் 2016 மார்ச் மதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.