Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்சயாவை மலேசியாவில் தவிக்க விட்ட காதல் கந்தாஸ்!

03 செப், 2015 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Akshaya-troubled-in-Malasiya

கலாபக்காதலன் படத்தில் கண்மணி என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அக்சயா. அதையடுத்து பழனியப்பா கல்லூரி, உளியின் ஓசை, எங்கள் ஆசான், உயர்திரு 420 என பல படங்களில் நடித்த அவர், தற்போது யாளி என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்து வருகிறார்.


இந்த படத்தில் தான் இயக்குனர் அவதாரம் எடுத்தது ஏன்? என்பது பற்றி அக்சயா கூறுகையில்,


இந்த யாளி படத்தை நான் ஏபி கிரியேசன்ஸ் சார்பில் தயாரித்து கதை எழுதி லீடு ரோலில் நடிக்கத்தான் முடிவெடுத்தேன். அப்போது நீங்களே தயாரித்து, கதையும் எழுதியிருப்பதால் படத்தையும் இயக்கலாமே என்று சினிமாவில் உள்ள பல நண்பர்கள் என்னிடம் கூறினர். ஆனால் எல்லா விசயங்களையும் நாமே எடுத்துக்கொண்டால் சரியாக செயல்படுத்த முடியாது என்பதால், டைரக்சனை வேறொருவரிடம் ஒப்படைக்க முடிவெடுத்தேன். அதையடுத்து நான் படம் தயாரிக்கயிருக்கிற சேதியறிந்து இயக்குனர் சான்ஸ் கேட்டார் நடன மாஸ்டர் காதல் கந்தாஸ். நான் நடித்த உளியின் ஓசை படத்தில் அவர் நடனம் அமைக்க வந்தபோது எனது நண்பரானார். ஏற்கனவே ஒரு கன்னட படம் இயக்கியிருக்கிறேன். நீங்கள் இந்த வாய்ப்பை கொடுத்தால் அதுவே எனக்கு தமிழில் ஒரு நல்ல என்ட்ரியாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். அதனால், அவருக்கு யாளி படத்தை இயக்கும் வாய்ப்பினை கொடுத்தேன்.


மேலும், கேமராமேன், மேனேஜர் என சில டெக்னீசியன்களை அவர் சொன்னவர்களையே படத்தில் பணியாற்ற நியமித்தேன். லொகேசன் முதற்கொண்டு அவர் கேட்டதையே நான் ரெடி பண்ணிக்கொடுத்தேன். ஆனால் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்தபோது அடுத்த நாள் படமாக்கப்போகும் காட்சிகள் பற்றியோ, புரொடக்சன் பற்றியோ எந்த விசயங்களையும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் என்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. ஏதாவது கேட்டால், படத்தை விட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன் என்பார். இப்படி பல நாட்கள் நடந்த நிலையில், ஒருநாள், சரி முடியாதுன்னா போய்க்கோங்கன்னு நான் சொன்னேன். அவ்வளவுதான், கேமராமேன் உள்பட அவர் கூட்டிவந்த அத்தனை டெக்னீசியன்களையும் அழைத்துக்கொண்டு சென்னை திரும்பி விட்டார். அவரை நம்பி மலேசியா சென்ற என்னை நட்ட நடுவுல தவிக்க விட்டுட்டு வந்துட்டார். யாரு பணம் போட்டாலும் ஒவ்வொரு ரூபாயும் வேல்யுதானே. இப்படியிருந்தா நாளைக்கு அவருக்கு யார் சான்சு கொடுப்பாங்க. ஒரு நண்பர் என்ற முறையில் அவர் மீது கோபம் என்பதை விட மனவருத்தம் தான் எனக்கு. ஆனாலும் நான் மலேசியாவில் படமாக்க திட்டமிட்டு சென்றதை எடுக்காமல் திரும்பவில்லை.


மேலும், சில உதவி இயக்குனர்கள், உதவி கேமராமேன்களுக்கு காதல் கந்தாஸ் அப்படி செய்தது பிடிக்கவில்லை. அதனால் அவர் அழைத்தபோது செல்ல மறுத்து விட்டனர். அதையடுத்து, நானே துணிச்சலாக இயக்குனரானேன். கதையே என்னுடையது என்பதால் எனக்கு டைரக்சன் பண்ணுவது கடினமாக இல்லை. சொல்லப்போனால் இன்னும் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. நான் நினைத்தபடியே எனது கதையை படமாக்கினேன். டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி சார் எனது குரு மாதிரி. அவர்தான் எனக்கு பக்கபலமாக இருந்தார். அவர் சொன்னபடிதான் படமாக்கினேன். இதுவரை படமாக்கப்பட்டுள்ள 70 சதவிகித காட்சிகளும் ரொம்ப நன்றாக வந்துள்ளது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்துகிறேன். ஆக இந்த ஆண்டுக்குள் அனைத்துகட்ட வேலைகளையும் முடித்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் யாளி படத்தை ரிலீஸ் பண்ண திட்டமிட்டுள்ளேன். இந்த யாளி படம் ஒரு அம்மா-மகளுக்கிடையே நடக்கும் கதை. இதில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மேலும், தமன்-அர்ஜூன், ஊர்வசி, மனோபாலா உள்பட பல முன்னணி நடிகர் நடிகையர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்கிறார் அக்சயா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in