ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் தனுஷ். தற்போதைய சூழலில் படம் தயாரிப்பது பெரிய விஷயமில்லை.
தயாரித்த படத்தை ரிலீஸ் செய்வதுதான் மிகப்பெரிய போராட்டம், ரிஸ்க். இதை தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கும் தனுஷ், படத்தைத் தயாரித்து வேறு யாரிடமாவது கை மாற்றிவிட்டு பல கோடிகள் பார்த்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'நானும் ரௌடிதான்' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தினேஷ் நடிக்கும் 'விசாரணை' ஆகிய இரண்டு படங்களையும் தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டு உரிமையையும், அதாவது தமிழ்நாடு தியேட்டரிகல் வெளியீட்டு உரிமையை 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்திடம் விற்றுள்ளார் தனுஷ். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த 'கத்தி' படத்தைத் தயாரித்த நிறுவனம் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' விக்ரம் உட்பட பல முன்னணி ஹீரோக்களிடம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு காத்திருக்கிறது.