மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'பாகுபலி' படம் வெளியான நாளில் இருந்தே விதவிதமான செய்திகள், புதுவிதமான சாதனைகள் என மீடியாவிற்கு எந்த குறையும் வைக்காமல் தீனி போட்டு வந்தது. படத்தின் வசூல் சுமார் 600 கோடியை தொட்டுவிட்டதாகவும் தகவல்.. பல தியேட்டர்களில் ஐம்பது நாட்களை தொட்டதோடு, இன்னும் சில தியேட்டர்களில் 50 நாட்களை தாண்டியும் ஓடிக்கொண்டு இருக்கிறது 'பாகுபலி. ஆனால் சில தியேட்டர்களில் இந்தப்படத்திற்கு மேலும் ஒரு சாதனையை உருவாக்குவதற்காகவே ரசிகர்கள் சில இடங்களில் படங்களை தொடர்ந்து திரையிட விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் வற்புறுத்துவதாக தகவல் வெளியானது.. இந்த தகவல் இயக்குனர் ராஜமவுலியின் காதுக்கு போக, இதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார்..
“பாகுபலி படம் வெளியான நாளிலிருந்து சில வாரங்களுக்குள்ளேயே எங்களுக்கு தேவையான வசூலை வாரி கொடுத்துவிட்டது. இப்போதுள்ள காலகட்டத்தில் 50 நாள், 100 நாள் என்பதெலாம் சாத்தியம் இல்லை.. காரணம் 1000க்கணக்கான தியேட்டர்களில் ரிலீஸாகி நான்கு வாரங்களிலேயே நல்ல லாபம் வந்துவிடுகிறது. பாகுபலிக்கும் கூட அப்படித்தான். இப்போது 50 நாட்களை தாண்டி ஒரு சில தியேட்டர்களில் மட்டும், அதுவும் தியேட்டர்காரர்கள் தரப்பிலிருந்து அவர்களே ஷேர் தருவதாக சொன்னதால் மட்டும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் கூட இன்னும் சில நாட்கள் தான். தேவையிலாமல் மற்ற படங்களின் வரவை, அவற்றின் வசூலை தடுத்து நிறுத்தும் விதமாக இன்னும் தொடர்ந்து தியேட்டர்களில் படத்தை ஓட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என ஓப்பனாக கூறியுள்ளார் ராஜமவுலி.