மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நயன்தாரா தொழிலில் ஒருபோதும் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கமாட்டார். 10 எண்றதுக்குள்ள படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டு நயன்தாராவை அணுகினார்கள். ஹீரோ விக்ரம் என்று சொல்லப்பட்டதும், கதையைக் கூட கேட்காமல் ஸாரி என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். தன் முன்னாள் காதலரான சிம்பு உடனே மீண்டும் ஜோடி சேர்ந்தவர்தான் நயன்தாரா. அப்படிப்பட்டவர் விக்ரம் உடன் நடிக்க மறுத்தது ஏன்? என்று கேட்டால் ஒரு ப்ளாஷ்பேக்கை காரணமாக சொல்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி என்ற படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருந்த நேரம் அது. அப்போது முன்னணி ஹீரோவாக இருந்த விக்ரம் உடன் நடிக்க பல நடிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் தான் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை அழைத்தாராம் விக்ரம்.
அவர் சார்பாக நயன்தாராவை சந்தித்தவர், நீங்க இப்போ எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க கமிட் ஆன அந்த படத்தை வேணாம்னு சொன்னீங்கன்னா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று சொல்ல, கடுப்பாகிவிட்டாராம் நயன்தாரா.
சினிமாவில் யாரும் ஒஸ்தி கிடையாது. யாரும் மட்டமும் கிடையாது. விக்ரமுக்காக நான் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடிக்கறேன்னு கொடுத்த வாக்கை கைவிட மாட்டேன். போய் அவர்ட்ட சொல்லுங்க. இப்ப மட்டுமில்ல, இனி எப்பவுமே விக்ரமுடன் நடிக்க மாட்டேன் என்று கூறி அனுப்பிவிட்டார் நயன்தாரா. அன்றைக்கு சொன்ன மாதிரியே விக்ரம் உடன் நடிப்பதில்லை என்பதில் இப்போது வரை பிடிவாதமாக இருக்கிறார் நயன்தரா.